No results found

    புகழூர் நகர தி.மு.க. சார்பில் அவசர ஆலோசனை கூட்டம்


    புகழூர் நகர தி.மு.க. சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நகர கழக அலுவலகத்தில் நடைபெற்றது. புகழூர் நகர அவைத்தலைவர் வாங்கிலி தலைமை தாங்கினார். புகழூர் நகர்மன்ற தலைவரும், நகர கழக செயலாளருமான நொய்யல் சேகர் (எ) குணசேகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், அமைச்சர் வி. செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்ததை கண்டித்தும், இந்த கைதை கண்டித்து கோவையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் புகழூர் நகர பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொள்வது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மாநில, மாவட்ட, நகர, வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் அணி அமைப்பாளர்கள் வாக்குச் சாவடி முகவர்கள் மற்றும் கழகத்தின் மூத்த முன்னோடிகள் உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    Previous Next

    نموذج الاتصال