No results found

    புதுவை ரெயில் நிலையம் ரூ.93 கோடியில் நவீனமாகிறது


    புதுவை ரெயில் பாதை இந்தியாவின் பழமையான ரெயில் இணைப்புகளில் ஒன்றாகும், 1879-ம் ஆண்டு இந்தியாவில் பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர் ஆட்சியின் போது புதுவை ரெயில்வே நிறுவனத்தால் கட்டப்பட்டது.

    தென்னிந்திய ரெயில்வே யின் மேற்பார்வையில், புதுவை நகரையும், துறை முகத்தையும் தென்னிந்தியா வுடன் இணைக்க மற்றும் புதுவை மற்றும் விழுப்புரம் இடையே ரெயில் இணைப்பு ஏற்படுத்தப்பட்டது.

    அப்போது பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே முழுப் பகை இருந்தபோதிலும் பொருளாதார வளர்ச்சியை பெற புதுவை ரெயில்வே நிலையம் கட்டமைக்க ப்பட்டது.

    இந்திய ரெயில்வேயின் தெற்கு ரெயில்வே மண்ட லத்தால் இயக்கப்படும் இந்த நிலையம் திருச்சிரா ப்பள்ளி ரெயில்வே கோட்டத்தின் கீழ் உள்ளது. கடந்த காலங்களில் புதுவை ரெயில் நிலையத்தில் பெரிய அளவில் போக்குவரத்து இல்லை.

    கால் நூற்றாண்டுக்கு முன்பு வரை பாழடைந்த கட்டிடம் போல மக்கள் நடமாட்டமின்றி ரெயில் நிலையம் இருந்தது.

    ஆனால், அதன் பிறகு மின்மயமாக்கப்பட்டு, புதிய பிளாட்பார்ம்கள் உருவாக்கப்பட்டு நாட்டின் தலைநகர் முதல் அண்டை மாநிலங்களுக்கு புதிய ரெயில் சேவை அறிமுகப்ப டுத்தப்பட்டது.

    தற்போது புதுவை ரெயில் நிலையத்தில் இருந்து மங்களூரு , கன்னியாகுமரி , பெங்களூரு , கொல்கத்தா , டெல்லி , புவனேஷ்வர் மற்றும் மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு தினசரி அல்லாத ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    இதுதவிர சென்னை , விழுப்புரம் மற்றும் திருப்பதி ஆகியவற்றுடன் தினசரி ரெயில் சேவையும் உள்ளது. புதுவை ரெயில்வே நிலையத்தை மாதிரி ரெயில்வே நிலையமாக மாற்ற ரெயில்வே துறை பணிகளை செய்து வந்தது.

    இந்த நிலையில் நாடு முழுவதும் அம்ரித் பாரத் நிலைய திட்டத்தின் கீழ் 508 ரெயில்வே நிலையங்கள் ரூ.25 ஆயிரம் கோடியில் புதுப்பிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் அரக்கோணம் சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு, கூடுவாஞ்சேரி, கும்மிடிப்பூண்டி, திருத்தணி, விழுப்புரம் சந்திப்பு உள்ளிட்ட 18 ரெயில்வே நிலையங்கள் ரூ. 515 கோடியில் புதுப்பிக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் புதுவை ரெயில் நிலையம் ரூ.93 கோடியில் நவீனமயமாக்கப்பட உள்ளது.இந்த திட்டத்தை டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மத்திய மந்திரிகள் அஸ்வினி வைஷ்ணவ், ராவ்சாகப் பாட்டில் தானாவே, தர்ஷனா ஜர்தோஸ் ஆகியோர் பங்கேற்றனர். புதுவை ரெயில்வே நிலையத்தில் பிரதமரின் காணொலி காட்சி திரையிடப்பட்டது. புதுவை ரெயில்வே நிலையத்தில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி , வி.பி.ராமலிங்கம் , அசோக் பாபு, பா.ஜ.தா.மாநில தலைவர் சாமிநாதன், போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் ரெயிவே அதிகாரிகள் பங்கேற்றனர்.

    புதுவை ரெயில் நிலையம் பழமை மாறாமல் நவீனமய மாக்கப்பட உள்ளது. இதன்படி புதுவை ரெயில் நிலைய கட்டிடஙகள் தரம் உயர்த்தப்பட்டுகூரை பிளாசா, வணிக மேண்டலம், உணவகம், சிறுவர் விளையாட்டு வதி ஆகியவை ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும் பயணிகள் வசதிக்காக தனித்தனி நுழைவு மேற்றும் வெளியேறும் வழி, வாகன நிறுத்தும் இடம், நகரும் படிக்கட்டு, டிராவலேட்டர், மாற்று திறனாளிகளுக்கு வசதிகள் அமைக்கப்பட உள்ளது.

    Previous Next

    نموذج الاتصال